உலகோர்க் கெல்லாம்பொது மொழியாய்
உயர்ந்த ஞாநியரின்
திரு வழியாய்
சந்தோஷ உணர்வின்
வெளிப்பாடாய்
சந்தர்பங்களில்
சங்கடங்களால்
பேசிடும் வார்த்தையே மௌனம்!
நசுக்கப்பட்ட இனத்தின் மௌனம்
காட்டில் மறைத்த கனலே என்பேன்!
இரவின் மௌனம்
விடியலின் சுகந்தம்
பூக்கள் பேசிடும்
புகழ் பெற்ற மொழி
சட்டென கலைந்தது
அலைபேசி அழைப்பால்!
Comments